ஆகாதது
எதுவுமில்லை - உம்மால்
ஆகாதது எதுவுமில்லை
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1. துதி செய்யத் தொடங்கியதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர் - 2
உம்மால் ஆகும்.
எல்லாம் ஆகும்.
2. அலங்கார வாசலிலே
அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில் - 2 - உம்மால்
3. கோலும் கையுமாக
பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் - 2
- உம்மால்
4. கண்ணீரைக் கண்டதாலே
கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் - 2
- உம்மால்
5. ஈசாக்கு ஜெபித்ததாலே
ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே - 2 - உம்மால்
6. எலியாவின் வார்த்தையாலே
சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே - 2 - உம்மால்
7. ஜெப வீரன் தானியேலை
சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர் - 2 - உம்மால்
8. கானவூரில் வார்த்தை சொல்ல
கப்பர்நாகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே - 2 - உம்மால்
9. தண்ணீரால் ஜாடிகளை
கீழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா - 2 - உம்மால்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment