06 March 2026

ஆதம் செய்த பாதகம் தொலைய

ஞா.கீ:38

To Download Txt Lyrics file

 

38. இராகம்: லாவணி                                                ஆதிதாளம் (388)

 

                             பல்லவி

 

          ஆதம் செய்த பாதகம் தொலைய மன்றாடி

          அனுக்கிரகமாகவே திருக்குமாரனும் நீடி - ஆதி

 

                             அனுபல்லவி

 

                        விதப் பரம போதன்-உயர்

                        மேன்மைக் கிறிஸ்து நாதன்,

                        வெகு கோடிப் புகழ் பாடி, தூதர் கூடி,

                        கொண்டாட நாடி சந்தானே - ஆதம்

 

                             சரணங்கள்

 

1.         மன்னன் தவீது குல கன்னி மரியினிடமாக

            மனுடர்களில் அதிக பிரியம் உற, வினைகள் போக,

            திருவானே தருகுவானே; சுய

            திரு உருவானே,

            மலையானே, கலையானே,-மலைச்

            சார்பில் பெத்தலேம் ஊரினில் பிறந்தானே - ஆதம்

 

2.         அகத் துதித் தொளிர் திருத்துவத்தி லொன்றானே,

            அனைத்துலகமும் வகுத்துக் காத்து நின்றானே

            மா மகத்வ இம்மானுவேலே, மன

            பிரிய மிகுதியாலே

            மனுவாக, வினைபோக,-பசு

            மாட்டுக் கொட்டிலில் காட்டினில் பிறந்தானே - ஆதம்

 

 

- வே.சா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...