ஆபிரகாம்
தேவனே ஸ்தோத்திரம்
ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
சர்வ வல்ல தேவனே ஸ்தோத்திரம்
1. முற் பிதாக்களை நீர் நடத்திச் சென்றீரே
எங்களையும் கூட நீர் நடத்திச் செல்லுமே
எங்கள் ஓட்டம் வெற்றியோடு ஓடி முடிக்கவே
கிருபை தாருமே உந்தன் அருளை தாருமே
மகிமை மகிமை ஓ தேவனே
மகிமை மகிமை இயேசு ராஜனே
2. பொன் முகத்தின் சாயலை கண்டு களிக்க
ஏங்குகின்றேன் உம் சமூகம் தாருமே
நேசர் மார்பினில் உம் பேரழகினை
ரசித்து ருசித்து மகிழ்வேன் நித்ய நித்யமாய்
3. விண்ணின் தூதரோடு நான் மகிழ்ந்திருக்க
மண்ணில் வந்து நீர் ஜீவன் தந்திட்டீரல்லோ
ஜீவ புத்தத்திலே எந்தன் பேர் எழுதியே
பரலோக பாக்கியம் தந்திட்டீரல்லோ
No comments:
Post a Comment