ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்
அலைகடல்
என்றும் ஓய்வதில்லை
ஆண்டவர்
இயேசுவை நம்பியவர்
அநாதையாகி
அலைவதில்லை - ஆயிரம் ஆண்டுகள்
1. மாதம்
ஒரு நாள் நிலா மறைந்தால்
வானிலா
இல்லை என்பாயோ - 2
சோதனை
வேதனை வருகையிலே நீ - (2)
தேவனே
இல்லை எனலாமோ - ஆயிரம் ஆண்டுகள்
2. ஆண்டவர்
கொண்ட திருச்சித்தம்
உன்னில்
ஆளுகை செய்ய இணங்கிடுவாய் - 2
காலையில்
கதிரவன் பனி போல (2)
உன்
கவலைகள் யாவும் மறைந்துவிடும் - ஆயிரம் ஆண்டுகள்
No comments:
Post a Comment