ஆதியும்
அந்தமுமானீர்
அனாதையின் சொந்தமுமானீர்
அநாதி சிநேகத்தால் சிநேகித்தீர்
அப்பா - உம்
(2)
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் துதித்திடுவேன்
1. உள்ளங்கையில் எம்மை வரைய
நீட்டிக் கொடுத்தீர் உம் கரத்தை
உள்ளமெல்லாம் நேசங்கொண்டு
உன்னதரே உம்மைத் துதிப்பேன் - ஆதியும்
2. ஆத்துமாவைக் கவர்ந்து கொண்டீர்
ஊற்றிக் கொடுத்தீர் உம் இரத்தத்தை
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
பரிசுத்தரே பாதம் பணிவேன் - ஆதியும்
3. நேசத்தினால் சோகமானேன்
கிச்சிலிப் பழத்தால் தேற்றிடுவீர்
ஆவி உடல் அத்தனையும்
ஆர்ப்பணித்தேன் இயேசுவுக்கே - ஆதியும்
No comments:
Post a Comment