ஆதிதேவன்
அருளைப் பெற்று அகிலம் வாழாதா
ஜோதி தேவன் சித்தம் செய்து
சொர்க்கம் போகாதா
நீதி தேவனே இயேசு
இராஜனே
நித்திய தேவனே
என் ஆத்தும நேசரே
1. தீப்பிழம்பாய் ஆன பின்னே
தீக்குணந்தான் தெரியுமே
தெய்வத்தோடு சேர்ந்த பின்னே
பேய்க் குணங்கள் நீங்குமே
2. பிறர் மகிழ தான் மகிழும்
பார்த்து பார்த்து பரவசிக்கும்
கறைகள் இல்லா உறவு சேரும்
கஷ்ட நஷ்டம் ஏற்றுக் கொள்ளும்
3. தீது எண்ணப் போகாது
தீமை ஒன்றும் அணுகாது
வாது சூது அறியாது
வானவர் துணை விலகாது
No comments:
Post a Comment