409.
இராகம்: முகாரி ஏக
தாளம்
பல்லவி
ஆ! என் ப்ராணநாதா! ஐயோ! என் ப்ராணநாதா!
ஆனீரோ
இந்தக் கோலம்-நாதா, நாதா, நாதா - ஆ!
சரணங்கள்
1. மாந்தரை
மீட்கவென்று-வானின் மகிமைவிட்டு
வந்த
பலனிதுவோ ஐயா, ஐயா, ஐயா - ஆ!
2. முற்றும்
பரன்செயலை-முடிக்கக் குருசில் தூங்கி
முடிந்த
தென்றாவி விட்டீர்-ஐயோ, ஐயோ, ஐயோ - ஆ!
3. அன்பு
மிகுந்த நேயா! பாவியெந்தன் சகாயா!
அடியானும்மைப்
பின்செல்வேன்-நாளும், நாளும், நாளும் - ஆ!
- ஜோசப் ஜோயல்சிங்
No comments:
Post a Comment