யாக்கோபே நீ வேரூன்றுவாய்
யாக்கோபே
நீ வேரூன்றுவாய்
- 2
பூத்து
குலங்கிடுவாய்
காய்த்து கனி
தருவாய்
பூமியெல்லாம்
நிரப்பிடுவாய்
(இந்த) - (2)
என்
மகனே(ளே)
நீ வேரூன்றுவாய்
1. நானே
காப்பாற்றுவேன்
நாள்தோறும்
நீர் பாய்ச்சுவேன்
- 2
இரவும்
பகலும் காத்துக்
கொள்வேன் - (உன்னை)
- (2)
எவரும்
தீங்கிழைக்க விடமாட்டேன்
- (2) - என் மகனே
2. அருமையான
மகன் அல்லவோ
பிரியமான
பிள்ளையல்லவோ
- நீ - 2
உன்னை
நான் இன்னும் நினைக்கின்றேன்
- (2)
உனக்காக
என் இதயம் ஏங்குகின்றது
- (2) - என் மகனே
3. நுகங்களை
முறித்துவிட்டேன்
கட்டுகளை
அறுத்துவிட்டேன்
- 2
இனிமேல்
நீ அடிமை ஆவதில்லை
- (2)
எனக்கே
ஊழியம் செய்திடுவாய்
- (2) - என் மகனே
4. புதிய
கூர்மையான
போரடிக்கும்
கருவியாக்குவேன்
(உன்னை) - 2
மலைகளை
மிதித்து நொறுக்கிடுவாய்
- (2)
குன்றுகளை
தவிடு பொடியாக்குவாய்
- (2) - என் மகனே
5. மேடுகளை
பிளந்து
ஆறுகள்
தோன்ற செய்வேன்
- 2
பள்ளத்தாக்கின்
நடுவினிலே - (2)
ஊற்றுகள்
புறப்பட்டு ஓடச்
செய்வேன் - (2) - என்
மகனே
6. நானே
உங்கள் தேவன்
நீங்கள்
என் பிள்ளைகள்
- 2
பாழான
மண்மேடு கட்டப்படும்
- (2)
பாடலும்
ஆடலும் மீண்டு்ம்
கேட்கும் - (2) - என்
மகனே
7. உன்னோடு
நான் இருந்து
உனக்காக
வழக்காடுவேன்
- 2
அச்சுறுத்துவோர்
எவருமின்றி
- (2)
அமைதியிலே
நீ இளைப்பாறுவாய்
- (2) - யாக்கோபே
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment