அழகானவரே
என் இயேசுவே
ஆயிரங்களில்
சிறந்தவரே
அன்பானவரே
என் ஆருயிரே
உயிரோடு
உயிராக கலந்தீரே
ஆராதிப்பேன்
அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம்
இயேசுவே - 2
உம்மை
மட்டும் ஆராதிப்பேன்
உம்மை
என்றும் ஆராதிப்பேன் - 2
1. தாயின்
கருவில் தெரிந்து கொண்டீர்
என் நிலைமை
அறிந்தும் என்னோடு நடந்தீர் - 2
என் தலையை
உயர்த்துவேன் என்று சொன்னீரே
என் முகத்தை
உள்ளங்கையில் வரைந்தேன் என்றீரே - 2
2. குறை சொல்லும்
மனிதர் முன் குறைவின்றி நடத்தினீர்
மேன்மையின்
கரத்தை நான் ஒருநாளும் மறவேனே - 2
என் வழக்கை
உம் கரத்தால் தீர்வு செய்தீர்
உம் தயவின்
ஆதரவால் உயர்ந்து செல்லுவேன் - 2
- Ps. Rahul
No comments:
Post a Comment