பெத்தலையில் பரமனுக்குக் கொண்டாட்டம்
பெத்தலையில்
பரமனுக்குக் கொண்டாட்டம்
அரமனையில்
ஏரோதுக்குத் திண்டாட்டம்
- 2
கொண்டாட்டம்
கொண்டாட்டம் ஊர்முழுக்கக்
கொண்டாட்டம்
உற்சாகம்
உற்சாகம் எங்கும்
உற்சாகம் - 2
1. கொட்டும்
பனி பார்த்தேன்,
நான் கோ மகனைப்
பார்த்தேன்
கொட்டி
வச்சப் பேரழகை
கொட்டகையிலே பார்த்தேன்
வெட்டவெளி
பார்த்தேன், நான்
வெளிச்சம் வரப்
பார்த்தேன்
வட்டமிடும்
சேனைகளை வயல்வெளியில்
பார்த்தேன்
குத்திருட்டு
வேளையில ஆண்டவர்தானே
குத்துவிளக்காக
ஒளி ஈந்தவர்தானே
- 2
சிற்றூறு
கண்டேனே சீரேசு
கண்டேனே
விண்ணும்
மண்ணும் சேரக்
கண்டேனே - பெத்தலையில்
2. அக்கரையப்
பார்த்தேன் நான்
இக்கரையப் பார்த்தேன்
விண்ணவரின்
தேனிசையில் சர்க்கரையப்
பார்த்தேன்
இரட்சகரைப்
பார்த்தேன் நான்
இரட்சண்யத்தைப்
பார்த்தேன்
இரட்சிப்பென்னும்
சந்தோசத்தை இரட்சகராய்
பார்த்தேன்
நட்டநடு
ராத்திரியில்
ஆண்டவர்தானே
வந்துதித்தார்
சூரியனைப் போன்றவர்தானே
- 2
தாலாட்டக்
கண்டேனே சீராட்டக்
கண்டேனே
அன்னை
மரி அன்பைக் கண்டேனே
- பெத்தலையில்
We wish you a merry Christmas
We
wish you a Happy Christmas - 2
Wish
you a merry Christmas
and
a Happy New Year - 2
- Dr. V.C. Amuthan
Comments
Post a Comment