எப்பிராத்தா என்ற பெத்லகேமே
எப்பிராத்தா
என்ற பெத்லகேமே
யூதேயாவில்
நீ சிறியதல்ல
இஸ்ரவேலை
ஆளும் ராஜா
உன்னிடமிருந்து
புறப்படுவார்
- 2
இரட்சகர்
வந்தாரே
இரட்சிப்பை
தந்தாரே
இரட்சண்ய
நாள் இதுவே - 2
1. ஈசாயின்
அடிமரத்தில் துளிர்
தோன்றிற்றே
வேரினின்று
கிளை ஒன்று எழும்பி
செழிக்குமே
கர்த்தரின்
ஆவி அவர் மேலிருப்பாரே
ஞானத்தையும்
அறிவையும் அவர்
அருள்வாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
சமாதான
பிரபுவே பிறந்திட்டாரே
- 2 - இரட்சகர்
2. நீதிபடி
ஏழைகளை நியாயம்
தீர்த்திடும்
நீதியுள்ள
தேவனவர் வந்து
விட்டாரே
நீதியின்
செங்கோல் அவர்
கையிலிருக்கும்
நித்திய
மாட்சி அவர் மேலே
இருக்கும்
நித்திய
பிதாவே நிமல ரூபனே
நீதியின்
மீட்பரே பிறந்திட்டாரே
- 2 - எப்பிராத்தா
- Nimmi Joe
Comments
Post a Comment