கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்
கர்த்தர்
என்னை நித்தமும்
நடத்திடுவார்
மகா
வறட்சியில் ஆத்துமாவை
திருப்தியாக்குவார்
மகா
வறட்சியில் ஆத்துமாவை
செழிப்பாக்குவார்
என் எலும்புகளை
நிணமுள்ளதாக்குவார்
வற்றாத
நீரூற்றாய்
மாற்றிடுவார்
- 2
நீர் பாய்ச்சலானத்
தோட்டத்தை போலாக்குவார்
வற்றாத
நீரூற்றாய்
மாற்றிடுவார்
நீர் பாய்ச்சலானத்
தோட்டத்தை போலாக்குவார்
1. உழைப்பின்
பலனை உண்ணச் செய்வார்
நன்மைகள்
வாழ்வில் நிகழ
செய்வார்
தலைமுறைகளை
காணச் செய்து
நலமும்
அமைதியும் பெருகச்
செய்வார் - 2
ஆண்டவருக்கு
அஞ்சி நடப்போம்
அவர்
வழி நடந்து வாழ்ந்திருப்போம்
- 2
நாம்
இஸ்ரவேலின் சமாதானம்
சுதந்தரிப்போம்
அவர்
வழி நடந்து வாழ்ந்திருப்போம்
நாம்
இஸ்ரவேலின் சமாதானம்
சுதந்தரிப்போம்
2. வாழ்வின்
பயணம் முடிந்திடுமே
முடிவில்
துவக்கம் பிறந்திடுமே
இயேசுவை
நம்பும் யாவருக்கும்
நம்பிக்கை
வாழ்வில் நிலைத்திடுமே
- 2
கர்த்தருடைய
நித்திய வீட்டில்
ஆனந்தமாய்
அவருடனிருப்போம்
- 2
நாம்
எல்லையில்லா வாழ்வை
சுதந்தரிப்போம்
ஆனந்தமாய்
அவருடனிருப்போம்
நாம்
எல்லையில்லா வாழ்வை
சுதந்தரிப்போம்
- Eva. David Vijayakanth
Comments
Post a Comment