மேலோக ராஜன் வருங்காலமாகுது
236. இராகம்: ஆங்கிலம் தாளம்: ஆதி
1. மேலோக
இராசன்வருங்
கால மாகுது
சாலோக
மகிமை பெறலாம்
- பாவி யோடிவா.
2. பாவம் நித்தமும்
மனம் நோகச்
செய்யுது
பரிசுத்தர்
இத்த லத்தில்
வந்தால் - கவசந்
தரிப்போம்.
3. இரவு
போயிற்று பகல்
சமீப மாயிற்று
இருளின்
செய்கை தள்ளி ஒளியின்
- கவசந் தரிப்போம்.
4. குடிவெறி
வேண்டாம் கோள்குண்டணி
வேண்டாம்.
பகலின்
பிள்ளைகள் போல்
சீராய் - நடக்கக்
கடவோம்.
5. எருசலேம்
நகர் மகா அரசர்
மாளிகை - அதை
ஏறிட்டுக்
கண்ணாலே பார்த்தால்
- ஏக்கம் தீருமே
6. தூதர் சேனைகள்
துதி பாடும் ஓசையால் - இப்
பூதலம்
திடுக்கிட
- வானோர்கள்
மகிழ்வார்.
7. உப்பார்சின்
தங்கக் கச்சை இடையிற் கட்டியே
உம்பர்கள்
ஒழுங் காக நின்று
- கீதம் பாடுவார்.
8. ஆசனங்களில்
இயேசு தாசரிருப்பார்
- அதின்
மத்தி
யிலோர் ஆசனம்
- இம் மானுவேலர்க்கு.
9. ஏழுடுகையில்
மார்ப ருகே பொற் கச்சை
வெண் பஞ்சு
நிறமாம் சிரசு
- இயேசுவுக்குண்டு.
10. பார்க்கக்
கூடாத பரிசுத்த
சோதியாய்
- மே
லோக இராசன்
வீற்றிருப்பார்
- தூதர்கள் சூழ.
11. கேரூபின்களும்
வானில் சேராபீன்களும்
- கெம்
பீரமாய்
முழங்கும் ஓசை
- கேட்டு மகிழ்வார்.
12. சேனையின்
தேவன் பரி சுத்தர்
சுத்தரே - என்
றோய்வில்
லாமல் நான்கு
சீவன் - போற்றி
நிற்குமே.
13. காலம் போகுது
பகலோன் வருகிறார்
- பல
மாகவே
உன் இரட்சிப்பை
நீ-தேடிக் கொண்டிரு.
14. பரிசுத்தரைக்
காண வெகு சுத்தம்
வேண்டுமே
திரு இயேசுவே
உம் இரத்தத்தாலே
- சுத்த மாக்குமே.
15. தோத்திரம்
சொல்வேன் மிகத்
தோத்திரம் சொல்வேன்
பிதாவுக்கும்
சுதன் ஆவிக்கும்
தோத்திரம் சொல்வேன்.
https://www.youtube.com/watch?v=1q6tu1-rzkI
YouTube LinkYouTube Link
Comments
Post a Comment