இந்த
ஆண்டு முழுவதும்
காத்து வந்தீர்
உம்மை
நன்றியால் துதித்திடுவேன்
எந்தன்
வாழ்வில் செய்திட்ட
நன்மைகளை
சொல்லி
என்றுமே துதித்திடுவேன்
- 2
கடந்த
நாட்கள் முழுவதும்
காத்து வந்தீர்
உம்மை
நன்றியால் துதித்திடுவேன்
எந்தன்
வாழ்வில் செய்திட்ட
நன்மைகளை
சொல்லி
என்றுமே துதித்திடுவேன்
இயேசுவே
நீர் வல்லவரே
எந்தன்
வாழ்வில் நல்லவரே
- 2
நீர்
தந்திட்ட உந்தன்
கிருபைகளை
என்றும்
எண்ணி துதித்திடுவேன்
- 2
1. பாதைகளெல்லாம்
செவ்வையாக்கினீர்
வாதைகள்
இன்றி காத்து வந்தீர்
- 2
வருஷத்தை
நன்மையால் முடிசூட்டி
பாதைகள்
நெய்யாய் பொழியச்
செய்தீர் - 2 -இயேசுவே
2. ஆபத்து
அணுகாமல் காத்து
வந்தீர்
அனுகூல துணையாய்
உடன் இருந்தீர்
- 2
தேவைகள்
அனைத்தும் சந்தித்தீரே
அற்புதமாய்
என்னை நடத்தினீரே
- 2 - இயேசுவே
3. சோதனை
நேரத்தில் ஜெயம்
தந்தீரே
சோர்ந்திடா
உள்ளமும் பெலன்
தந்தீரே - 2
காத்திருந்து
ஜெபிக்க செய்தீர்
செட்டைகள்
அடித்து எழும்ப
செய்தீர் - 2 -இயேசுவே
4. பரிசுத்த
ஆவியால் நிரப்பினீரே
சத்திய
பாதையில் நடத்தினீரே
- 2
ஆவியின்
வரங்களை வெளிப்படுத்தி
அற்புத
அதிசயம் செய்தீரே
- 2 - இயேசுவே
- Rev. D. Jebaraj
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment