நாங்க தெம்மாங்கு பாடுறவங்க
நாங்க
தெம்மாங்கு பாடுறவங்க
ஓ
அய்லேசா நல்ல கட்டுமரத்திலே
போய் வருவோங்க அட அய்யாஹோ
வலைகளினால் மீன் பிடிப்போம்
அலைகளினால் அலைபடுவோம்
1. ஆழ்கடல் செல்ல செல்ல
திரும்புதல் நிச்சயமல்ல
பழைய வலையை நம்பி நம்பி
பாடுபட்டு மீன் பிடித்தோம்
2. ஆண்டவர் வந்தாருங்க
ஆழம் போகச் சொன்னாருங்க
வலை கிழிஞ்சு போகும்படி
மலையாய் மீனு தந்தாருங்க
3. வல்ல இயேசு வந்தாருங்க
வா என சொன்னாருங்க
மனந்திரும்பி வலையை விட்டு
மனுஷங்களை பிடிக்க வாரோம்
4. நாங்க தெம்மாங்கு பாடுறவங்க
அல்லேலூயா
நல்ல தெவிட்டாத செய்தி சொல்றவங்க
ஆமென் அல்லேலூயா
அருட்தொண்டு செய்கின்றோம்
எல்லோருக்கும் பயன்படுவோம்
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Very very good and very very useful for village innocent and illiterate people to know about Jesus mercy
ReplyDelete