ஆட்கொண்ட
நல் நேசர் இயேசு தேவா
என்னையே
தந்தேனே
எந்நாளும் பரிசுத்தம் காத்துமே
என்றென்றும் உம்மை சேவிப்பேன்
1. என்றும் உம்மை சேவித்திட
நல்ல பங்கை கண்டைந்தேன்
இயேசுவே பின்செல்வேன்
என்றுமாக தாங்கி என்னை வழி நடத்திடுவீர்
2. ஜீவப் பலியாய் ஒப்படைத்தேன்
மாம்சம் சாக அர்ப்பணித்தேன்
இயேசுவே தந்தேனே
என்னையே ஏற்றுக் கொள்ளும் அர்ப்பணம் செய்தேன்
3. உந்தன் நாமம் உயர்த்துவேன்
மகிழ்ச்சி பெலனை தந்தவரே
இயேசுவே நம்பிடுவேன்
உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே
4. உந்தன் வேலை ஊக்கத்துடன்
உறுதியாக செய்திடவே
அகத்தினில் எரிந்திடும்
அன்பின் நல் ஜுவாலைப் போல் எரிந்திட செய்வீர்
5. தேவ பயமே நிறைந்துமே
பக்தியோடு ஆராதிப்பேன்
ஆறுதல் பெருகிடும்
உம்மை என்றும் பாடியே உயர்த்திடுவேன்
No comments:
Post a Comment