114.
இராகம்: இங்கிலீஸ் ஆதிதாளம்
பல்லவி
ஆமென்,
அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா;
ஆமென்,
அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா.
அனுபல்லவி
ஆம்
அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே,
உன்னதமே! - ஆமென்
சரணங்கள்
1. வெற்றிகொண்
டார்ப்பரித்து-கொடும்வே
தாளத்தைச்
சங்கரித்து,-முறித்து;
பத்ராசனக்[1]
கிறிஸ்து-மரித்து,
பாடுபட்டுத்தரித்து,
முடித்தார். - ஆமென்
2. வேதம்
நிறைவேற்றி,-மெய் தோற்றி,
மீட்டுக்
கரையேற்றி,-பொய் மாற்றி,
பாவிகளைத்
தேற்றி,-கொண்டாற்றி,
பத்ராசனத்
தேற்றி வாழ்வித்தார். - ஆமென்
3. சாவின்
கூர் ஒடிந்து,-மடிந்து,
தடுப்புச்
சுவர் இடிந்து,-விழுந்து,
ஜீவனே
விடிந்து,-தேவாலயத்
திரை
ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. - ஆமென்
4. தேவ
கோபந் தீர்ந்து,-அலகையின்
தீமை
எலாஞ் சோர்ந்து-முடிந்தது;
ஆவலுடன்
சேர்ந்து-பணிந்துகொண்
டாடும்,
களி கூர்ந்து மகிழ்ந்து - ஆமென்
- வேதநாயகம் சாசுதிரியார்
No comments:
Post a Comment