ஆண்டவர்
உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக
1. ஆபிராம்
போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய்
அமைந்திடுவாய் - 2
மாபிரதானம்
மாண்புறுதானம்
மாநில
மீதில் நீ சமாதானம் - ஆண்டவர்
2. 'ஆசி
பொழியேல் அகலவிடேன்'
ஆவலின்
ஏங்கல் அருள்வேண்டல் - 2
ஆசியடைந்த
யாக்கோபு மீண்டும்
அன்பாய்
ஏசாவுடன் இணையச் செய்த - ஆண்டவர்
3. பெண்களுள்
மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல
மேன்மை அவள் ஈந்தாள் - 2
எண்ணருள்
பாடு இன்னல்கள் நேர்ந்தும்
எண்ணியே
இறையுளம் இசைந்தது போல் - ஆண்டவர்
4. 'இந்தச்
சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே
தருவீர்' எனும் இயேசு - 2
'எந்தையால்
ஆசி பெற்றோரே வாரீர்'
என்றதும்
வலதிட மகிழ்வேற்பாய் - ஆண்டவர்
No comments:
Post a Comment