பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

          புகழ் செலுத்தி மகிழ்வோம்

                        அன்றதிகாலை மூன்றாம் நாளில்

                        சொன்னப்படி எழுந்தார் - 2

 

          இதோ கல்லறை திறக்க ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.  அவர் மரணத்தையும் மரணத்தின் அதிகாரியாகிய பிசாசையும் பாதாளத்தையும் ஜெயித்தார்.  இவரை விசுவாசிக்கும் நமக்கும் இனி மரணம் நேரிட்டாலும் பயமில்லை.  நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தால், கடைசி தேவ எக்காளம் தொனிக்கும் நாளில் ஆவிக்குரிய சரீரத்தோடு அழிவில்லாதவர்களாய் அவராலே நிச்யமாகவே உயிர்த்தெழும்புவோம்.  மோட்ச பாக்கியம் பெற இயேசுக் கிறிஸ்துவின் மூலம் ஜெயம் நமக்கே.

 

1.         பரம சீயோன் சேருவோம்

            மரணமோ நம் ஜீவனோ

            கடைசி நேரம் கேட்டிடுவோம்

            எக்காள சத்தம் முழக்கிடுமே

                        கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்

                        கல்லறை திறக்க எழும்பிடவே

            மறுரூபம் கண்ணிமைப் பொழுதே

            மகிமை அடைந்தே பறந்து செல்வோம் - 2 - பரிசுத்தர்

 

          பிரியமானவர்களே நமது சத்திய வேத தீர்க்கதரிசனங்களின்படி இயேசுக் கிறிஸ்துவின் வருகையும் உலகத்தின் அழிவாகிய மகா உபத்திரவக் கலியுகமும் நெருங்கிவிட்டன. தமக்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் தமது சொந்த பக்தர்களை கலியுக கஷ்டங்களுக்கு தப்புவித்து தம்முடன் சேர்த்துக்கொள்ள இதோ சீக்கிரமாய் வரப்போகிறேன் என்று இயேசு வாக்களித்திருக்கிறார்.  நாம் மறுரூபமாகி அவரிடம் மேலே எடுத்துக்கொள்ளப்பட பரிசுத்தாவி அருள்வரம் பெற்றவர்களாய் உலக ஆசாப்பாசங்களையும் பாவத்தையும் வெறுத்து தூய வாழ்க்கை செய்வோம் சத்திய வேதத்தை அனுதினமும் வாசித்து தேவ கற்பனைகளை கைக்கொள்ளுவோம்.  பாவ சோதனைக்குட்படாமல் விழித்திருந்து எப்பொழுதும் ஜெபம் செய்வோம்.  தெய்வீக அன்புடன் திருச்சபையார் இயேசுவுக்கு தொண்டு புரிவோம்.  நன்மை செய்து தீமையை அனுபவிப்போம். இயேசுவைப்போல் ஜீவனை வெறுத்துப் பாடுபட்டால் சத்திய வேதம் கூறுகிறபடி கலியுகம் கடந்து வரப்போகும் பொற்காலத்தில் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்.  தேவன் நியாத்தீர்ப்பு கொடுக்கும் நாளில் பாவ விமோட்சனம் தேடிக்கொள்ளாத ஜீவனுள்ளோரும் மரித்தோரும் நரக ஆக்கினை அடைவார்கள்.  நாமோ தெய்வீக தீர்மானம் நம்மில் நிறைவேறும்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆத்மீக வாழ்க்கையில் முற்றும்முடிய வெற்றிப்பெற்று நமக்காக ஆயத்தமாக்கப்பட்ட பரலோக வாசஸ்தலங்களில் உத்தம இடத்தையும் கீர்த்தியை சுதந்தரித்து நித்திய ஜீவன் உள்ளவர்களாய் யுகாயுகம் இயேசுவோடு நீடூழி பேரின்பமாய் வாழ்வோமாக.  இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து இவ்வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கும் பிரியமானவர்களே இயேசுவுக்கு அடிமையாக ஊழியம் செய்யும் சகோதரியாகிய நான் உங்கள் அனைவருக்காகவும் அனுதினமும் ஊக்கமுடன் ஜெபம் ஏறெடுக்கிறேன். என் ஜெபத்தின் பலன் இப்பொழுதே உங்களுக்குள் கிரியை செய்யும் என்ற நம்பிக்கையோடு தேவ சமாதான வாழ்த்துதலை இயேசுவின் தூய நாமத்தில் உங்களுக்கு கூறி முடிக்கிறேன்.  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=1mXhqnWX0y8

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு