திவ்விய
ஸ்பிரித்து
சாந்துவே!!!
தேவரீர்
எழுந்தருளி
வாரும்!!!
உமது
ஞான கதிர்களை வரவிடும்!!!
(2)
இயேசுவின்
ஆலய மணி ஓசை கேட்டு
இதயம் குளிருதாடா
நெஞ்சில்
இன்பம் பிறக்குதடா
- 2
நெஞ்சில்
இன்பம் பிறக்குதடா..
1. ஆலயத்துள்ளே
ஆண்டவன் உருவம்
ஆளை இழுக்குதடா
அதில்
அடைக்கலமான
உயிர்களின்
கொடிய
பாவத்தை அழிக்குதடா
- 2 - இயேசுவின்
2. அமைதியின்
இருப்பிடம் அறிவின்
பிறப்பிடம்
அங்கே தெரியுதடா
இயேசு
வழியினில்
பயணம் செல்பவன்
வாழ்வில்
எல்லாம் புரியுமடா
- 2 - இயேசுவின்
3. கருணையின்
வடிவம் கர்த்தரின்
உருவம்
கண்ணுக்கு
தெரியுதடா
இயேசு
மனித குலத்திலே
பிறந்ததனால்
இந்த
மண்ணுக்கு பெருமையடா
- 2 - இயேசுவின்
4. மன்னிக்க
தெரிந்த இயேசுவின்
இதயம்
மரகத வாசலடா
இயேசு மகனை
ஈன்ற மரியாள்
வாழும்
மாதா கோயிலடா
இது மாணிக்க
கோயிலடா.
இது மாதா
கோயிலடா
https://www.youtube.com/watch?v=RBg76FGWwRg
No comments:
Post a Comment