அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே
அழைக்கின்றார்
அவர் உன்னை அழைக்கின்றார்
உன் துன்பம் துயரம் கவலை நீக்க
இன்றே அழைக்கின்றார்
உன்னை அழைக்கின்றார்
1. இரத்தம் தோய்ந்த கைகளைக் கண்டு சித்தம் தெரியாயோ
நித்தம் ஆணி பாய்ந்த காலை முத்தம் செய்யாயோ
உத்தமர் இயேசு உந்தனுக்காக இத்தனை வாதையோ
சத்திய நாதர் சத்தமாய் அழைக்கும் சத்தம்
கேளாயோ
2. பேயின் கட்டு உலக மாயை எல்லாம் விரைந்தோடும்
நோயின் வாடை பார சுமைகள் சொல்லால் பறந்தோடும்
தாயின் பாசம் சேயின் நேசம் ஒருநாள் மறைந்தோடும்
ஆயின் வாக்கு மாறா இயேசு அன்போ வழிந்தோடும்
No comments:
Post a Comment