இறைவா எனக்கு
நீர்தான் வேண்டும்
வேறு எதுவும்
எனக்கு வேண்டாம்
நீர்
இல்லாத நாவு எதற்கு
நீர்
இல்லாத நினைவு
எதற்கு
நீர்
இல்லாத சொல்லே
எதற்கு
நீர்
இல்லாத செயலும்
எதற்கு
1. அன்பை ஏற்கும்
தேவன் நீரே
அன்பை அளிக்க
ஓடி வந்தேனே -2
அன்பின்
உருவே அருளின்
வடிவே -2
உம் கை
சேர்த்து ஆட்கொள்
திருவே
ஆட்கொள்
திருவே - இறைவா
2. கடமை வழியில்
நானொரு ஆமை
உண்மை வழியில்
நானொரு ஊமை
-2
உண்மை அன்பு
உமது உறவு -2
அன்பில்
நிலைத்தால் நானும்
நிலவு
நானும்
நிலவு - இறைவா
No comments:
Post a Comment