என் தேவன் என் வெளிச்சம்
என்னை
இரட்சிப்பவரும் அவரே
என்
ஜீவனுக் கரணானவர்
நான்
யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை
ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி
என்னை உயர்த்திடுவார் - என்
2.
தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
- 2
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து
நின்றார்
என்னைப் பகைத்தவர்கள்,
தேவனை அறிந்தாரே - 2 - என்
3. சாத்தான் என்னை சோதித்திட்டாலும்
கர்த்தர் இயேசென்னை
நிறைத்திடுவார் - 2
என்னை ஒளிச்சுடராய், பயன் படுத்திடுவார்,
என்னை தம்சாயலாய்,
என்றும் மாற்றிடுவார் - 2 - என்
4. தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து
தம் கரத்தினால் தாங்கிடுவார் - 2
தம் கூடார மறைவிலே, ஒளித்து வைத்து,
செவ்வை யான,
பாதையில் நடத்திடுவார் - 2 - என்
No comments:
Post a Comment