ஐயையோ நான் என்ன செய்வேன் அங்கம்

ஐயையோ நான் என்ன செய்வேன் அங்கம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   ஐயையோ நான் என்ன செய்வேன்

                        அங்கம் பதைத்தியங் குதையோ

                        மெய்யா எந்தன் பாவத்தாலே

                        மேசியா வாதைக் குள்ளானார்

 

1.         முள்முடி சிரசில் வைத்து

            மூங்கில் தடியால் அடிக்க

            கண்களில் இரத்தம் துடிக்க

            கரையுதையோ எந்தன் உள்ளம்.

 

2.         கால் தளர்ந்து போச்சுதையோ

            கைகள் சோர்ந்து விழுகுதையோ

            சொல் விழிகள் மங்குதையோ

            தேவே எந்தன் பாவமல்லோ.

 

3.         பெற்ற தாயார் அலறி விழ

            பிரிய சீடர் பதறியோட

            செற்றலர் திரண்டு சூழ

            தேவே கொல்கதாவின் நீட

 

4.         நாவரண்டு நடை தள்ளாட

            நண்பர் கண்டு பதறியோட

            ஜீவ இம்சையே மேலாட

            தேவ கொல்கதாவில் நீட

 

5.         சிலுவைதனை பாட்டில் இட்டு

            தேவே உம்மை மேல் கிடத்தி

            வலுவாய் கையால் தனை இழுத்து

            மாட்டீனாரோ ஆணிவிட்டு.

 

6.         துடிக்குதே என் அங்கமெல்லாம்

            சோர்வடைந்த எந்தன் ஆவி

            வெடிக்குதே என் இடது விலா

            வீரன் ஈட்டியாலே குத்த

 

7.         இந்த கஷ்டம் நீர் சகிக்க

            வந்ததும் என் பாவமல்லோ

            உந்தன் குற்றம் யாதுமில்லை

            எந்தையே நீரே என் தஞ்சம்.

 

 

https://www.youtube.com/watch?v=jfsfMLpOC-U

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு