என் ஆத்துமாவே
கர்த்தரைத் துதி
அவர் செய்த
நன்மைகளை மறவாதே
என் உள்ளமே
அவர் நாமத்தை துதி
அவரே என்றென்றும்
பரிசுத்தர்
1. மேற்கிற்கும்
கிழக்கிற்கும்
தூரம்போல
பாவங்கள்
உன்னைவிட்டு விலக்கினாரே
தகப்பன்
தன் பிள்ளைக்கு
இரங்குமாப்போல்
கர்த்தருக்குப்
பயந்தால் இரங்குவாரே
2. தோல்விகள்
யாவையும் மாற்றினாரல்லோ
ஜெயத்துடன்
நம்மை நடத்துகின்றார்
வெற்றி
தினம் தரும் தேவனையே
முழுமனதுடனே
என்றுமே துதி
3. வேதனை
யாவையும் நீக்கினாரல்லோ
வழிகள்
யாவையும் நேராக்கினார்
பாதம்
கல்லில் இடறாதபடி
காத்திடும்
தேவனை என்றுமே
துதி
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment