ஆண்டவர்
பிறந்தார் ஆர்ப்பரித்துப் பாடுங்க
தூயவர்
பிறந்தார் துள்ளி துள்ளி ஆடுங்க
வானதூதர்
போலே நல்ல வாழ்த்துப்பாட்டு பாடுங்க
தந்தந்தானே தந்தந்தானே தந்தந்தானே தானானே
1. காபிரியேல்
தூதன் நல்ல செய்தி சொல்லவே
கான
மேய்ப்பர் பாலனை கண்டு பணிந்தாரே
கர்த்தரைத்
துதித்து மகிழ்வுடன் பாடியே
கண்டோருக்கு
நல்ல செய்தி கூறியே சென்றாரே
2. வானத்திலே
விந்தையாக நட்சத்திரம் கண்டே
வான
சாஸ்திரிகள் பின் தொடர்ந்து வந்தே
வெள்ளைப்
போளம் பொன்னும் தூபவர்க்கம் படைத்தே
வாழ்க
வாழ்க வாழ்கவென்றே வாழ்த்துக்கூறி சென்றாரே
3. வாழைமர
தோரணம் வீதி எங்கும் கட்டுங்கோ
கிறிஸ்மஸ்
தாத்தாவோடே பரிசு மழை கொட்டுங்கோ
ஏழை
எளியோரோடே உணவை பகிர்ந்தே
ஏற்றுக்
கொள்வோம் இயேசுவை நம் உள்ளத்திலே இன்றே
No comments:
Post a Comment