தாயான தகப்பனாய்
தாங்கி
என்னை ஏந்தி
சுமந்து
வந்தீரே!
உம் அன்பு
கரம் நீட்டி
அள்ளி அனைத் தென்னை
தூக்கி
சுமந்தீரே!
உம் அன்பை
மறவேன்!
உமக்காய்
வாழ்வேன்!
என் தாயான
தகப்பன் நீரே!
என்னை
தாங்கி சுமந்தீரே!
1. தடுமாறும்
போது தாங்கிக்கொண்டீரே
என் தவிப்புகளில்
என்னை தேற்றினீரே
பெலவீனத்தில்
என் பெலனாய்
வந்தீரே
என் தேவைகளின்
தேடல் நீரே
2. தாயுன்னை
மறந்தாலும் மறவேன்
என்றீரே
உம் உள்ளங்கையில்
என்னை பொறித்தவரே
இராப்பகலாய்
கண்ணுறங்காமல்
கண்மணிப்போல்
என்னை காத்தவரே
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment