அருளின்
மனம் வீசும்
நறுமலரே
உன்னை கண்டேன்
குளிரில்
ஏழை குடிலில்
என்
துன்பம் நீக்க வந்தாயோ
கண்ணே தாலேலோ கண்ணே தாலேலோ
ஆரிராரோ ஆரிரிரரோ
ஆரிராரோ ஆரிரிரரோ
ஆரிராரோ ஆரிரிரரோ
ஆரி ராராரிரோ
1. பொன்னும்
மணியும் உன் மேனியில்
சிந்த
மனமில்லாமல்
கந்தை
துணியை நாடி நீ
இந்நிலம்
வந்தாயோ
குளிரில்
ஏழைக் குடிலில்
நீ
துன்பம் நீக்க வந்தாயோ
2. பாட
தூதர் சூழ்ந்து
இசை
பாட ஏங்கிடாமல்
மேய்ப்பர்
குரலின் ஓசை
நீ
கேட்கவே வந்தாயோ
குளிரில்
ஏழைக் குடிலில்
நீ
துன்பம் நீக்க வந்தாயோ
No comments:
Post a Comment