அப்பா செய்த நன்மைகளை நினைச்சு பார்க்கிறேன்
ஆர்வத்தோடு
நன்றி சொல்லி துதித்து மகிழ்கிறேன்
நன்றி ராஜா இயேசு ராஜா
1. நான்
செய்த பாவங்கள் மன்னித்தீரே
உம்
மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே
2. வாதை
என் கூடாரத்தை அணுகாது என்று
வாழ்நாளெல்லாம்
காத்து வந்தீரையா
3. இல்லாததும்
பொல்லாததும் சொல்லிய போது
மகிழ்ந்து
களி கூர வைத்தீரையா
4. உச்சிதமான
கோதுமையால் போஷித்தீரே
கன்மலையின்
தேனினால் தாகம் தீர்த்தீரே
5. அறியாத
புரியாத காரியங்களை
கூப்பிட்ட
நேரங்களில் அறிவித்தீரையா
6. நோய்களாலே
துவண்டு போன அந்த நேரத்தில்
சுகம்
தந்து என்னையும் காத்தீரையா
No comments:
Post a Comment