மகிழ்ச்சியோடு
துதிக்கிறோம்
மனம்
மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவனே
இயேசு ராஜா - எங்கள்
மனதில்
பூத்து மணம் வீசும்
ரோஜா
இயேசு
ராஜா சாரோன் ரோஜா
- 2
1. நாற்றமாக
இருந்த என்னை வாசமாக
மாற்றினீரே
பாவியாக
இருந்த என்னை பரிசுத்தமாய்
மாற்றினீரே - 2
நல்லவரே
வல்லவரே - (2)
எங்களை
வாழ வைக்கும் அன்பு
தெய்வம் நீரே
- (2) - மகிழ்ச்சியோடு
2. நெருக்கத்திலே
இருந்த என்னை விசாலத்தில்
வைத்தீரே
சேற்றிலிருந்து
தூக்கி எடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
- 2
அற்புதரே
அதிசயமே - (2)
ஆனந்தமே
பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே
பரம ஆனந்தமே - மகிழ்ச்சியோடு
3. நான் அடுப்புக்கரி
போலிருந்தேன்
பொன் சிறகாய்
மாற்றினீரே
உம் இரத்தத்தாலே
கழுவி என்னை சுத்தமாக
ஆக்கினீரே - 2
உன்னதரே
உயர்ந்தவரே - (2)
இருள் நீக்கும்
ஒளி விளக்கே
உள்ளத்தின்
இருள் நீக்கும்
ஒளி விளக்கே - மகிழ்ச்சியோடு
4. தாயைப்போல
என்னை அவர் சோர்த்தணைத்துக்
கொண்டாரே
நல்ல தந்தை
போல என்னை அவர்
தோளில் தூக்கிச்
சுமந்தாரே - 2
அப்பாவல்லோ
எந்தன் அப்பாவல்லோ
- (2)
பிள்ளையல்லோ
செல்லப் பிள்ளையல்லோ
இயேசுவுக்கு
பிள்ளையல்லோ
செல்லப் பிள்ளையல்லோ
- மகிழ்ச்சியோடு
- Pastor. Dr. Jeyaseelan Sebastian
YouTube Link
No comments:
Post a Comment