ஆண்டவரே அன்பின் இலக்கணமே

ஆண்டவரே அன்பின் இலக்கணமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   ஆண்டவரே அன்பின் இலக்கணமே

                        வாருமையா வந்து அருள் தாருமையா

 

1.         பையூரில் இருந்த என்னை

            பொய்யூரில் சேர்த்தவரே

            மெய்யூரை காண வேண்டும்

            பேரருளை தந்திடுவாய்

                        பாவம்தனை போக்கிடுவாய்

                        பாவி என்னை மீட்டிடுவாய்

                        பரலோகம் வரவேண்டும்

                        பாதைதனை காட்டிடுவாய்

 

2.         கடுகளவு விசுவாசம்

            இருந்தால் போதும் என்றாய்

            மலைகூட நகரும் என்று

            மறைநூலில் சொல்லி வைத்தாய்

                        சிந்திக்கவே தவறிவிட்டன்

                        சிலைபோல இருந்துவிட்டேன்

                        சந்திக்கவே வந்துவிட்டேன்

                        சத்குருவே வாருமையா

 

3.         பாலைவனம்தனிலே

            மன்னாவை ஈன்றவனே

            பாவிகள் யாவரையும்

            ஒன்றாக சேர்த்தவரே

                        யோசுவா வழிநடத்த

                        யோசனை சொன்னவரே

                        யோர்தானை கடக்கச் செய்து

                        கானானை தந்தவரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு