தேவகுமாரா
கேட்கிறதா
என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள்
என்னை மட்டும் பார்க்கிறதா
1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்
2. கண்ணீர் வெள்ளம் பெருகினது
கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்
- VAIRAMUTHU
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment