அன்பு பொங்கிடுதே நிரம்பி வழிந்திடுதே
இயேசுவின் கிருபையால் என்றும்
உள்ளத்திலே
1. பசியுமில்லை தாகம் இல்லை
மீட்பர் இருக்கையிலே
சோர்வும் இல்லை வருத்தம் இல்லை
தோல்விகள் என்றும் இல்லை
ஆனந்தம் ஆனந்தம் என்றும் பேரின்பம்
2. மீட்பர் முகம் பார்த்திருப்பேன்
தாழ்ச்சி அடைவதில்லை
மார்பினிலே சாய்ந்துக்கொள்வேன்
ஆறுதல் அடைந்திடுவேன்
ஆனந்தம் ஆனந்தம் என்றும் பேரின்பம்
3. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீர் அருகினிலே
என்றும் நடத்திடுவார்
அன்பு பொங்கிடுதே நிரம்பி
வழிந்திடுதே
4. ஆத்துமாவை தேற்றிடுவார்
ஆறுதல் அளித்திடுவார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மைகள் தொடர்ந்து வரும்
அன்பு
பொங்கிடுதே நிரம்பி வழிந்திடுதே
No comments:
Post a Comment