இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உன்
காரியங்கள் கை
கூடுமே
என்
இயேசுவின் நாமத்தினால்
1. என் தேவன்
தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளை
எல்லாம் கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி
நடத்திடுவார்
நெஞ்சமே
கலங்காதே நெஞ்சமே
திகையாதே
2. ஒன்றுக்கும்
கலங்காமல்
எல்லாவற்றையும்
குறித்து
விண்ணப்பத்தோடும்
தோத்திரத்தோடும்
தேவனிடம்
சொல்லிடுங்கள்
3. வரப் போகும்
ரட்சகரை
எதிர்பார்த்து
வாழ்ந்திடுவோம்
நம்முடைய
குடியிருப்போ
பரலோகத்தில்
உண்டு
4. ஆத்துமாவே
கர்த்தரையே
ஸ்தோத்தரித்து
போற்றிடு
அவர் செய்த
நன்மைகளை
மறவாமல்
புகழ்ந்து துதித்திடு
துதித்திடு
நெஞ்சமே துதித்திடு
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment