இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
புதிய
பாட்டு நானும்
பாடிடுவேன்
எந்தன்
நேசரை மகிமைப் படுத்திடுவேன்
அவரே எந்தன்
இனிய மணவாளன்
ஆயுள் எல்லாம்
அவரைத் துதிப்பேனே
1. அவரின்
கண்கள் இனிய புறாக் கண்கள்
அவரின்
அழகு பொன்னைப்
போன்றதே
ஆயிரம்
பதினாயிரம் பேரில்
அழகினிலே என்றும்
சிறந்தவரே
2. கன்மலையாம்
இயேசு என் நேசர்
கண்மணிப்போல்
என்னைக் காத்திடுவார்
பகலின்
குளிர்ச்சி இனிய
வேளையில்
அவரோடு
நான் என்றும் உறவாடுவேன்
3. பரிசுத்தாவி
எனக்கு தந்தாரே
ஜீவ வழியை எனக்கு
காண்பித்தார்
அவர்
கரத்தை நானும்
பிடித்திடுவேன்
மறுவிநாடி
பறந்து சென்றிடுவேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment