அமைதியான இரவில்
அளவில்லாத
தேவன்
குளிரும்
மாட்டு குடிலில்
குழந்தையானதேனோ
தேவன்பிலே நாம் மூழ்கவே
தெய்வீகம் மனுவானதோ
ஜோதி சுதன் சாயல் பெற
பேரன்பின் வடிவானதோ
1. தந்தை
மொழி பேசும் இதழ் பூவாகுமே
கொஞ்சும்
விழி சிந்தும் மொழி தெய்வீகமே
நேசத்தின்
நிலவாக வாராய்
நெஞ்சோடு
உறவாட வா
ஞானத்தின்
நிறைவான பாலா
என்னோடு
நிறைவாக வா
என் வாழ்வின் ஒளி நீயே
என் வாழ்வின் வழி நீயே
என் வாழ்வின் துணை நீயே
எல்லாம் நீயே
2. வானில்
ஒரு விண்மீன் அது வழி சொல்லுதோ
ஆயர்குடி
பாடும் தொனி தேன் சிந்துதோ
தாவீதின்
மகனான ராஜா மாந்தரின் துணைதேடுமோ
ஞானிகள்
கண் தேடும் ராஜா மாந்தரின் சேயானதோ
No comments:
Post a Comment