உமது கரத்தினால்
என்னையும் நடத்துமே
உம் சித்தம்
மூலமே தினமும்
நடத்துமே
இருளில்
காரிருளில் தீபமாய்
நடத்திடுமே இயேசுவே
1. மலைகள்
விலகினாலும்
பர்வதம்
நிலை பெயர்ந்தாலும்
என்றும்
மாறிடா உம் கிருபையே
போதும்
எந்தன் வாழ்வில்
அதுவே
2. பகலில்
மேகத்தைப் போல
இரவில்
அக்கினி தூண்களாய்
ஆற்றி தேற்றிய
தேவனை
சதா காலம்
துதித்திடுவோம்
3. உமக்காய்
வாழ்ந்திடதானே
என்னையே
உம் கையில் தந்தேனே
நல்ல ஓட்டத்தை
நான் ஓடியே
முடிக்கவும்
கிருபை செய்யும்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment