அன்பினை பாடவா
உம் இறக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா
உம் தியாகத்தை பாடவா
வேறென்ன
வேண்டும் எந்தன் வாழ்விலே
உம்மை
பாடும் கிருபை ஒன்றே போதுமே
1. வானம் விட்டு இந்த பூமி வந்த
உம் தாழ்மையை கண்டுக்கொண்டேன்
வாடும் உள்ளங்களை வாழச் செய்திட்ட
இறக்கம் கண்டுக்கொண்டேன்
ஜீவனும் நீரல்லோ
என் வாழ்க்கையும் நீரல்லோ
கோடி கோடியாய் பாடினாலும்
உம் அன்புக்கீடாகுமோ
2. கொல்கதாவிலே கோரச் சிலுவையில்
அன்பினை கண்டுக்கொண்டேன்
கள்ளர் நடுவினிலே ராஜ ராஜனின்
தியாகம் கண்டுக் கொண்டேன்
ஆறுதல் நீரய்யா
அடைக்கலம் நீரய்யா
கோடிக் கோடியாய் பாடினாலும்
உம் அன்புக்கீடாகுமோ
No comments:
Post a Comment