கர்த்தர்
உன்னை உயர்த்துவார்
கருத்தாய்
உன்னை நடத்துவார்
காலமெல்லாம்
கரம் பிடிப்பார்
கலங்காதே
மகனே - நீ
கலங்காதே
மகனே
1. பரிசுத்த
வாழ்வு வாழ்ந்திடவே
பாசமாய்
உன்னை அழைக்கிறார்
யோசேப்பை
உயர்த்தின தேவன்
உன்னை பெரியவனாக்கி
ஆசீர்வதிப்பார்
2. அனுதினம்
அவருடன் வாழ்ந்திடவே
அர்ப்பணம்
இன்றே செய்வாயா?
தானியேல்
போலவே உன்னையுமே
தாழ்மையின்று
உயர்த்துவார்
3. வேதத்தை
தினமும் தியானித்திடு
செய்திடும்
காரியம் வாய்த்திடுமே
யோசுவாவோடு
இருந்த தேவன்
வெற்றியை
தந்து உயர்த்துவார்
4. கர்த்தரின்
ஊழியம் செய்திடவே
கனிவுடன்
உன்னை அழைக்கிறார்
உலகெங்கும்
உந்தன் பெயர்தனையே
புகழ்ச்சியாக்க
உயர்த்துவார்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment