கர்த்தரை நான் எக்காலத்திலுமே

கர்த்தரை நான் எக்காலத்திலுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    கர்த்தரை நான் எக்காலத்திலுமே

                        கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் - 2

                        அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே

                        கருத்துடனே துதிப்பேன்

 

1.         ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும்

            ஆதலால் கலக்கமில்லை - 2

            அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக்

            காத்து ஆயுளை நீட்டுகிறார்

            என்னோடு கூட கர்த்தர் மகிமையை

            எல்லோரும் உயர்த்திடுங்கள்

            அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார்

            என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை

 

2.         இவ்வேளை கூப்பிட்டால்

            கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்ப்பார்

            அவர் இடுக்கண்களுக்கெல்லாம்

            நீங்கலாக்குவார்

            இரட்சிப்பை அருளிச் செய்வார்

            சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து

            பட்டினியாய் இருக்கும்

            ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ

            சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை

 

3.         கர்த்தரின் பிள்ளைகளே பயத்துடன் அவர்

            வார்த்தைக்கு செவிகொடுங்கள்-2

            என்றும் தீமையை விட்டு விலகியே நீங்கள்

            நன்மையை செய்திடுங்கள்

            நாவை பொல்லாங்கிற்கும் உதடை வஞ்சனைக்கும்

            விலக்கியே காத்திடுங்கள்

            கர்த்தர் நீதிமான் மேல் நோக்கமாய் இருந்து

            கூப்பிடுதலை கேட்பார் - கர்த்தரை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு