அமர்ந்து
காத்திருப்பேன்
எந்தன் அப்பாவின்
சமூகத்திலே
நான் பேச அவர் கேட்பார்
அதுதான் என் ஜெப நேரம்
அவர் பேச நான் கேட்பேன்
அதுதான் என் ஜெப நேரம்
1. அதிகாலையில் வாஞ்சையோடே
அவர் பாதம் அமர்ந்திருப்பேன்
துதித்திடுவேன் தூயனையே
துரிதமாய் வந்திடுவார்
2. அறிக்கை செய்வேன் அவரிடமே
அன்புடன் அணைப்பாரே
பாவங்களை மன்னிப்பாரே
பரிசுத்தம் செய்வாரே
3. ஊற்றிடுவேன் பாரங்களை
தேற்றிடும் இயேசுவிடம்
துடைத்திடுவார் கண்ணீரை
துயரை துதித்திடுவேன்
4. பரன் சித்தமே பூமியிலே
நாள்தோறும் செய்யணுமே
தேவ ராஜ்ஜியம் வளரனும்
தினம் அருள் தாரும் என்பேன்
- Rev. Kalai Devadasan, Kolathur AG
No comments:
Post a Comment