கர்த்தர்
என் ஜீவனும்
பெலனுமானவர்
யாருக்கு
அஞ்சிடுவேன்
கர்த்தர்
என் கோட்டையும்
அரணுமானவர்
நான்
யாருக்கு அஞ்சிடுவேன்
1. கண்மணியைப்
போல காத்த ஆண்டவர்
காலம் காலமாக
என்னை காத்து நடத்துவார்
கண்ணீர்
கவலை யாவும் வந்து
வீழ்ந்த போதும்
கரம்பிடித்து
கர்த்தர் என்னை
காத்து நடத்துவார்
2. கர்த்தரே
என் நம்பிக்கையின்
துருகமானவர்
காக்கும்
கரம் கொண்டு என்னை
அணைத்துக் கொள்ளுவார்
துன்பத்திற்கு
நான் பயந்து போவதில்லை
காத்திருந்து
பெலனடைந்து
சாட்சி பகர்வேன்
3. கர்த்தரே
என் வெளிச்சமும்
நீதியானவர்
தீமை என்னை
அனுகாமல்
காத்துக் கொள்ளுவார்
உள்ளங்கையில்
என்னை வரைந்து
வைத்துக் கொள்வார்
வல்ல கரம்
கொண்டு என்னை வழிநடத்துவார்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment