அன்பு
இல்லாத உலகினிலே
கலங்கி அலையும் மனிதனே
1. நீ
பெரும் சமாதானம் உள்ளத்தில் இல்லையோ
வெற்றிடத்தை
நிரப்பிடும் சந்தோசம் இல்லையோ
அன்பாக
அழைக்கிறார் இயேசு அண்டை நீ வா
2. நம்பினவர்
கைவிட்டாரோ நம்பிக்கை இழந்திட்டாயோ
பாரம்
உன்னை தாக்கி உள்ளம் சோர்ந்து தவிக்கின்றாயோ
அன்பாக
அழைக்கிறார் இயேசு அண்டை நீ வா
3. வியாதி
உன்னை தாக்கி உள்ளம் சோர்ந்து தவிக்கின்றாயோ
நம்பிக்கையே
இல்லையென்று மறந்து வாடுகிறாயோ
பரிகாரி
இயேசுவிடம் இன்றே ஓடியே வா
No comments:
Post a Comment