அச்சமில்லை அச்சமில்லை
என் தெய்வம் என்னோடு இருப்பதால் - 2
அச்சம் என்பதில்லையே - 2
1. ஏழு மடங்கு அக்கினி ஆனாலும்
என்னைச் சேதப் படுத்தாது
கோலியாத்துக்கள் எழும்பினாலும்
ஓடி நானும் முறியடிப்பேன்
அச்சம் என்பதில்லையே - 2
2. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
துதியினால் விலச் செய்திடுவேன்
துன்பங்கள் அநேகமாயிருந்தாலும்
எனக்குள் இருப்பவர் விடுவிப்பாரே
அச்சம் என்பதில்லையே - 2
3. இல்லாமையின் இருள் என்னைச் சூழ்ந்தாலும்
இயேசுவின் நாமத்தில் சுதந்தரிப்பேன்
வியாதி வருத்தம் நெருக்கினாலும்
விசுவாசத்தில் வெற்றிப் பெறுவேன்
அச்சம் என்பதில்லையே - 2
No comments:
Post a Comment