ஆராரிரோ நான் பாட கண்ணே நீ உறங்கு
- 2
விண் தூதர் பாடும் கானம் வானில்
கேட்குதே
மண்ணில் நீ பிறந்ததினாலே என்
இதயம் மகிழுதே - 2
ஆரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆராரிரோ
- 2
1. ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே - 2
தீர்க்கன் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
நிறைவேறும் காலம் வந்ததே - 2
2. மார்கழி மாதத்தில் பனித் தூவும் வேளையில்
மன்னவன் இயேசு பிறந்தாரே - 2
இழந்துப் போன வாழ்வை தந்திட
நம் இயேசு ராஜா பிறந்தாரே - 2
No comments:
Post a Comment