ஆதரவா யாரும் இல்ல
எனக்கு இந்த உலகத்தில - 2
உம்மைப் பற்றி கேள்விப்பட்டேன்
உடனடியாய் ஓடி வந்தேன் - 2
ஏற்றுக் கொள்ளுமைய்யா
மன்னித்து மன்னித்து ஏற்றுக்கொள்ளுமைய்யா
சேர்த்துக் கொள்ளுமைய்யா
சபையினில் சேர்த்துக் கொள்ளுமைய்யா
- 2
1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே - 2
சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
பெலனற்ற என் சரீரம் சோர்வடைந்து போனதே
- 2
கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
வருந்தி அழைத்தேன் எனக்கு வழி காட்டிடுமே
- 2
2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
பரமனே உன்னை தேடி வந்தேனே - 2
பாவி நான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கின்றேன்
- 2
ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன்
- 2
No comments:
Post a Comment