அதிகாலையில் உம்மை அழைப்பேன்
நடுப் பகலும் உம்மை நாடுவேன்
- 2
பகலிலும் துதிப்பேன் இரவிலும்
துதிப்பேன்
இப்பொழுதும் முப்பொழுதும்
உம்மை துதிப்பேன் - 2
1. தானிய உணவுண்டு பொழிவோடு இருந்த
தானியேலைப் போல ஜெபிப்பேன் - 2
தாகத்தோடும் முழு மனதோடும்
தப்பாது உம்மைத் துதிப்பேன் - 2
2. அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது
கண்ணீர் சிந்தி ஜெபிப்பேன் - 2
பொறுத்தனையோடு வருத்தமின்றி
உறுதியாய் உம்மைத் துதிப்பேன் - 2
3. தாவீது போல நடனமாடி
தாளத்தோடுப் பாடி ஜெபிப்பேன் - 2
பண்ணோடு நல் இசை இசைத்து
பரனே உம்மைத் துதிப்பேன் - 2
- Dr. Mrs. Chellathai Ponnudurai
No comments:
Post a Comment