கர்த்தர் தூயர் தொனியாய்

கர்த்தர் தூயர் தொனியாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    கர்த்தர் தூயர் தொனியாய்

                        கதறி முகங் கவிழ்ந்தே

                        இருள் சூழ்ந்த தோட்டத்திலே

                        இதயம் நொறுங்கி ஜெபித்தார்

 

1.         மரணத்தின் வியாகுலமோ

            மனிதர் துணை இல்லையோ

            தேவ தூதன் தேற்றிடவே

            தருணம் நெருங்க ஒப்படைத்தார்

            துன்ப சுமை சுமந்தார்

 

2.         தூக்கத்தால் தம் சீஷர்களே

            தலை சாய்ந்து தூங்கினரே

            தம்மை மூவர் கைவிடவே

            தூரமாய் கடந்தே திகிலடைந்தார்

            தன்னந் தனிமையிலே

 

3.         பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை

            நான் ஏற்றுக் கொண்டேன்

            ஆகட்டும் உமது சித்தம்

            அது நீங்கிடுமோ என்றுரைத்தார்

            ஆ! இரத்த வேர்வையுடன்

 

4.         திறந்த கெத்சமெனேயில்

            துணிந்து வந்த பகைஞன்

            என்ன துரோகம் செய்திடினும்

            எந்தன் சிநிகிதனே என்றழைத்தார்

            என்ன மா அன்பிதுவோ

 

5.         பரமன் ஜெப சத்தமே

            பூங்காவினில் கேட்கின்றதே

            பெருமூச்சுடன் அழைக்கும்

            அவரோடிணைந்தே கண்ணீருடன்

            ஆவியிலே ஜெபிப்பேன்

 

6.         இயேசு தாங்கின துன்பங்கள்

            என்னை தாண்டியே செல்லாதே

            எனக்கும் அதில் பங்குண்டே

            சிலுவை மரண பாடுகளால்

            சீயோனின் சேர்ந்திடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு