நினைந்து நினைந்து கண்ணீர் சொரிந்து

நினைந்து நினைந்து கண்ணீர் சொரிந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

192. இராகம்: பியாகு                      ரூபகதாளம்

 

பல்லவி

 

          நினைந்து நினைந்து கண்ணீர் சொரிந்து

          மனதுமே கசிந்தான்-பேதுரு;

            கனிவதா யுணர்ந்தான்.

 

சரணங்கள்

 

1.         சாகும்பொழுது நானும் உம்முடன்

            சாவேனென்றேனே! துட்ட

            சாகசரோடு கூடி யவரை

            மோசஞ் செய்தே னென்று - நினை

 

2.         அறியேனென்று நான் மறுதலித்து

            ஆணையு மிட்டேனே!-ஜீவ

            அறிவு உம்மிலுண்டென்று யான் சொல்லியும்

            எதிரியானே னென்று - நினை

 

3.         கண்ணாலே என்னை யுற்றுப் பார்க்கவும்

            கலங்குதே மனது-நீர்

            சொன்ன சொற்படி கூவுதே சேவல்

            என்ன செய்வே னென்று - நினை

 

4.         என்தன் துணிவால் உம்மை மறுத்து

            ஏத்தினேன்[1], சுவாமி!-இப்போ

            சிந்தனை கொண்டு சேவடி வந்தேன்,

            சேர்ப்பீர் என்னை என்று - நினை

 

- அருள்திரு. ச. சீமோன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 



[1] ஏமாற்றுதல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு