அல்லேலூயா என்று சொல்லிப் பாடிடுவோம்
ஆர்ப்பரித்து நம்மில் நாம்
அகமகிழ்வோம்
ஸ்தோத்திரம் என்றுச் சொல்லி
துதித்திடுவோம்
தோல்வியே இல்லையென்று ஜெயித்திடுவோம்
1. மன்னன் இயேசு வருவார் என்று பார்த்திருப்போம்
மணவாளன் வருவார் என்று காத்திருப்போம்
- 2
மணவாட்டி நாம் என்று ஆயத்தமாவோம்
மகிழ்ச்சியோடு கைக்கொட்டி வாழ்ந்திடுவோம்
2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையினிலே
கன்னியமாய் ஒன்றுக்கூடி களித்திருப்போம்
- 2
காலமெல்லாம் காத்திடுவார் நம்பிடுவோம்
கண்ணீரை துடைத்திடுவார் வியந்திடுவோம்
3. தேவனுக்கு மகிமைச் சொல்லி அழைத்திடுவோம்
தேற்றரவாளனுக்கு அன்புச் செலுத்துவோம்
- 2
ஓய்வு நாளில் ஒய்யாரமாய் கூடிடுவோம்
ஓங்கி ஒலித்து ஜென்மதாபம் புரிந்திடுவோம்
No comments:
Post a Comment